/* */

மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

HIGHLIGHTS

மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்
X

பைல் படம்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம் என்ற நிலையில் தமிழக அரசு இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெரும் என அறிவித்தது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 624 மையங்களில் நடைபெறும் மையங்கள் மூலமாக 85 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் முதல் மாவட்டத்தில் 85 சதவிகித பகுதிகளில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது

மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் கூட குறைவான அளவே தடுப்பூசி இருப்பில் இருந்ததால் தடுப்பூசி செலுத்தி கொள்ள நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடனும் வேறு மையங்களை தேடி அலையும் சூழ்நிலையும் உருவானது.

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் 52 வார்டுகளில் 80 க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசிகள் தீர்ந்தன.

ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மறு புறம் மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வந்தது கொரோனா பரவளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

Updated On: 12 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு