/* */

அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு

அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை திட்டத்தை செயல்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

அனைத்து கோவில்களிலும் மெய்நிகர் வரிசை: திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு
X

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசனத்துக்காக தேர்ந்தெடுக்ககூடிய தேதி ,நேரம் ஆகியவற்றை முடிவு செய்து அதை முன்கூட்டியே மெய்நிகர் வரிசை திட்டம் வழியாக முன் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யும் திட்டத்தை கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டு அப்போதைய சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்பு பொறுப்பு வகித்த A.D.G.P நடைமுறைப்படுத்தினார்.

அன்று இந்த திட்டத்தை தேவை உள்ள பக்தர்கள் மட்டும் பயன்படுத்தினால் போதும் என்று இருந்தாலும் தமிழகம், ஆந்திர, கர்நடாகா உட்பட பல மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் இதனை அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த மெய்நிகர் வரிசை திட்டம் சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் முன்பதிவு செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என ஆனது.

சபரிமலையில் காவல்துறை சார்பில் நடைமுறைபடுத்தப்பட்ட இந்த திட்டத்தை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனைத்து கோவில்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள், தேவசம் போர்டு ஊழியர் சங்கம் மற்றும் சில பக்தர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று கொண்டு இந்த திட்டத்தை தேவசம் போர்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூன்று மாதத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனந்தகோபன் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு