/* */

கன்னியாகுமரி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட போதகர் உட்பட 7 பேர் கைது, சொகுசு கார் பறிமுதல்

கன்னியாகுமரி அருகே தேவாலயம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட போதகர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி அருகே  பாலியல் தொழிலில் ஈடுபட்ட  போதகர் உட்பட 7 பேர் கைது, சொகுசு கார் பறிமுதல்
X

கன்னியாகுமரி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட்ட மதபோதகர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் எஸ்.டி மாங்காடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஷைன் சிங் (40) மத போதாகராக இருக்கும் இவர் அதே பகுதியில் உள்ள சொகுசு வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் சர்ச் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த வீட்டில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாகவும் இவர்கள் சர்ச் பெயரை பாதுகாப்பிற்க்காக வைத்து கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அந்த சர்ச்சை கண்காணித்த போலீசார் சர்ச் என்ற பெயரை கொண்ட வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர், அப்போது 19 வயது இளம் பெண், கேரளாவை சேர்ந்த இளம் பெண் உட்பட 4 பெண்கள் அறைகுறை ஆடைகளுடன் படுக்கை அறைகளில் ஆண்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்களையும் அவர்கள் வந்த சொகுசு வாகனம் மற்றும் போதகரான லால் ஷைன் சிங், மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் ஆகியோரை நித்திரவிளை காவல்நிலையத்திற்க்கு போலீசார் அழைத்து சென்றனர்.

அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் களியக்காவிளை அருகே பனங்கள் பகுதியை சேர்ந்த ஷைன் 34, மேக்காடு பகுதியை சேர்ந்த ஷிபின் 34, ஞாறான்விளை பகுதியை சேர்ந்த ராணி 55, சுகந்தி 40 என்றும் இந்த வீட்டில் போதகத்திற்கு வருவது போல் அடிக்கடி வந்து இளம் பெண்கள் மற்றும் ஆண்களுடன் பாலியல் தொடர்பில் ஈடுபட்டு செல்வதாகவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 19 வயது இளம் பெண்ணை தாயே பாலியல் தொழிலுக்கு அழைத்து வந்தது குறிப்பிடதக்கது. அதன் பேரில் நித்திரவிளை போலீசார் போதகர் லால் ஷைன் சிங் மற்றும் இரண்டு இளம் வயது பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 14 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  10. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!