/* */

ரப்பர் ஆலையால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குமரியில், குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள ரப்பர் ஆலையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ரப்பர் ஆலையால் சுகாதார சீர்கேடு:  நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
X

வெள்ளங்கோடு பகுதியில் செயல்படும் ரப்பர் ஆலை.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அடுத்த வெள்ளங்கோடு பகுதியில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தனிநபர் ஒருவரால் ரப்பர் சீட்டுகளை உலர வைக்கும் ஆலை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் சுவாசக்கோளாறு தொற்றுநோய் உள்ளிட்டவை ஏற்படுத்துவதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

மேலும், அதிகாரிகளிடமும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர், ஆனால் அந்த ஆலையை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து முறையாக அனுமதி பெறாமல் அந்த ஆலை இயக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த ரப்பர் ஆலையை உடனடியாக அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 20 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  2. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  4. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  5. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  6. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  7. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  10. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க