/* */

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள் காேரிக்கை

கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருபவர்களுக்கு சோதனையை கட்டாயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

நாேய் தாெற்று பரவும் அபாயம்: எல்லை சாேதனையை தீவிரப்படுத்த பாெதுமக்கள் காேரிக்கை
X

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனைச் சாவடி.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்து இருக்கும் நிலையில் குமரியை தொட்டு அமைந்துள்ள திருவனந்தபுரம் மாவட்டம் உட்பட கேரளாவில் நோய் தொற்றின் தாக்கம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 5 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்.சி.பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று கட்டாயம் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நாளை கேரளாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான திருவோணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக பொருட்கள் வாங்கவும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும் என பலர் கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வருகின்றனர், ஆனால் எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்படாததால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி குமரி மாவட்டம் வந்து செல்கிறது.

இந்நிலையில் குமரியில் நோய் தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன, தற்போது கேரளாவில் நாளொன்றுக்கு 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் குமரி எல்லை சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தபடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான சோதனைச் சாவடியான களியக்காவிளை சோதனைச்சாவடி உட்பட ஏழு சோதனை சாவடிகளிலும் போலீசார், சுகாதாரதுறை, வருவாய்துறை உள்ளிட்ட 3 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மூலம் சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பானது அறிவிப்பாக மட்டுமே இருப்பது பொதுமக்களை அச்சம் அடைய செய்து உள்ளது.

Updated On: 20 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...