/* */

குமரியில் விதிமுறை மீறிய வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் 2,030 வழக்கு

குமரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒரே நாளில் 2030 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் விதிமுறை மீறிய   வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் 2,030 வழக்கு
X
கன்னியா குமரியில் விதிமுறை மீறிய வாகன ஓட்டுனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் இயங்குவதோடு அதி வேகமாக இயக்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பது காவல்துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அதன்படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம் இல்லாதது, உரிய ஆவணங்கள் இல்லாதது என பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் 2030 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Updated On: 24 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?