/* */

நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தல் : மடக்கிய போலீசார்

நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

HIGHLIGHTS

நெல்லையில் இருந்து குமரிக்கு புகையிலை கடத்தல் : மடக்கிய போலீசார்
X

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் சிறப்பு படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி நோக்கி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது.

போலீசார் அந்த வாகனத்தை தடுத்தபோது, அந்த வாகனம் நிற்காமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. சந்தேகம் அடைந்த போலீசார், துரத்தி சென்று மடக்கி பிடித்து வாகனத்தை சோதனையின்னர். அதில், சுமார் 95 கிலோ புகையிலை இருந்தது.

அந்த வாகனத்தில் இருந்த வள்ளியூர் மறவர்காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் மந்திரமூர்த்தி 43 மற்றும் ஆலங்குளம் கீழத்தெரு பகுதியை சார்ந்த ஞானசேகர் மகன் சுரேஷ்குமார் 25 ஆகிய இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். குமரி மாவட்டத்தில் வினியோகம் செய்வதற்காக புகையிலை நெல்லையில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இரண்டு பேரையும் கைது செய்த ஆரல்வாய்மொழி போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Updated On: 28 Jan 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்