/* */

குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - ஒருவர் கைது

குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை - ஒருவர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன அய்யர்க்கு, கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளி அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் சென்ற போது, அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில், அவர் சூழால் பகுதியை சேர்ந்த அபிஜித் (25) என்பது தெரியவந்தது, தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த இடத்தை சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தார். மேலும் அவர் மீது கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணியம்மாள் வழக்கு பதிவு செய்தார்.

Updated On: 15 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது