/* */

குமரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை - 3 வாலிபர்கள் கைது

குமரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை - 3 வாலிபர்கள் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக எழுந்த புகாரின் பேரில், நேற்று புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் முஞ்சிறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, முஞ்சிறை அரசு மேல்நிலைப் பள்ளியின் பின்பகுதியில் ஒரு கும்பல் மாணவர்களுக்குக் கஞ்சா பொட்டலம் விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அந்த கும்பலை பிடித்தனர், அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்றவர்கள் உதச்சிகோட்டை பகுதி தாஸ் மகன் அஸ்டிபர் (21), தென்னாட்டு விளை ஜான்சன் மகன் ஜான் கிறிஸ்டோபர்(19), கீழ்குளம் பகுதி ஜெகன் ஜெபாஸ்கர் மகன் ஜெனிஸ் (20) என தெரிய வந்தது. மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 12 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது