/* */

ஓணம் பண்டிகை - குமரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

ஓணம் பண்டிகை - குமரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பைல் படம்

கேரளா மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை ஒன்று.கானம் விற்றாகிலும் ஓணம் கொண்டாடு என்பது பழமொழி, அதாவது கால் இடம் இருந்தாலும் அதனை விற்று ஓணம் கொண்டாடு என்பது பொருள்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் அளித்து கேரளா மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய மன்னர் ஆட்சி காலத்தில் கேரளாவின் ஒரு பகுதியாக இருந்த நிலையில் குமரியில் பெரும்பாலான மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவர்.

இந்நிலையில் வரும் 21 ஆம் தேதி சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.

அன்றைய தினம் குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவித்து உள்ள மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் 11-09-21 சனிக்கிழமை வேலை நாளாக இயங்கும் என்றும் உள்ளூர் விடுமுறை நாளில் அத்தியாவசிய பணிகள் தேவையான பணியாளர்களை கொண்டு நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

Updated On: 19 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!