/* */

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டு: கேள்விப்பட்டது உண்டா?

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டில் குமரி மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்து சாதனை.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பை உருவாக்கும் அட்டையா பட்டையா விளையாட்டு: கேள்விப்பட்டது உண்டா?
X

சேரன்மகாதேவியில் நடைபெற்ற அட்டையா, பட்டையா போட்டி.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கிளியாந்தட்டு என்ற விளையாட்டு, கடந்த 1982 ஆம் ஆண்டு தேசிய அளவிலான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டது. தேசிய அளவில் உள்ள பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்த இந்த விளையாட்டு, தற்போது அட்டையை பட்டையா என்னும் விளையாட்டாக மாறி உள்ளது.

ஒரு அணியில் 9 பேர் விளையாட, மூன்று பேர் காத்திருக்கும் பலருக்கும் தெரியாத இந்த விளையாட்டு தற்போது பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற மாநில அளவிலான அட்டையா பட்டையா போட்டியில், முதல் பரிசை சென்னை அணியும், இரண்டாவது பரிசை ஈரோடு அணியும், மூன்றாம் பரிசை கன்னியாகுமரி மாவட்ட அணியும் பெற்றது.

இதனிடையே மூன்றாவது இடத்தை பெற்ற கன்னியாகுமரி மாவட்ட அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல் பாராட்டு தெரிவித்தார். இதனிடையே பொதுமக்களில் பலருக்கும் தெரியாமல் இருந்தாலும் விளையாட்டு வீரர்களிடையே மிகவும் பிரபலமான, அதே நேரம் சுறுசுறுப்பான விளையாட்டு என கூறப்படும் 'அட்டையா பட்டையா' விளையாட்டு தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாக மாறி உள்ளது.

இதில் பயிற்சி பெற்று முன்னணி வீரர்களாக வருபவர்களுக்கு தபால் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளில் பணிகள் அதிக அளவில் உள்ளன. எனவே உடல்நலத்தை பேணுவதோடு, அதிக அளவில் விளையாட்டு வீரர்கள் உருவாவதன் மூலம் இந்த விளையாட்டும் மேம்படும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Updated On: 12 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை