குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி

குமரியில் வெளுத்து வாங்கிய கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X

கோப்பு படம்

குமரியில், நீண்டநாட்களுக்கு பின்னர் வெளுத்து வாங்கிய கனமழையால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நீடித்து வந்தது, கத்திரி வெயில் காலத்தை போன்ற வெயிலின் தாக்கம் நீடித்து வந்தது. இந்நிலையில் இன்று நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தக்கலை உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.

இடியுடன் கூடிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் மாவட்டத்தில் வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் மாவட்டத்தின் மலையோரப்பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் அணைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் குமரியில் கும்பப்பூ சாகுபடி நெல் விவசாயத்திற்கு தற்போதைய மழை கைகொடுப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture