நாகர்கோவிலில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு

நாகர்கோவிலில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு
X
குமரி ரயில் நிலையங்களில் இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய ரெயில்வே பயணிகள் சேவை குழு தலைவர் ரமேஷ் சந்துரு ரத்னா இன்று குமரி. நாகர்கோவில் ரெயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரெயில்வே பிளாட்பாரங்களில் உள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர் ரெயில் நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

நாகர்கோவிலில் இருந்து தற்போது எத்தனை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பிளாட்பாரங்களில் எத்தனை இருக்கை வசதிகள் உள்ளன, எத்தனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் இரட்டை ரெயில் பாதை பணிகள் எந்த நிலையில் உள்ளது, கழிவறை வசதிகள் மற்றும் பயணிகளுக்கான தங்கும் வசதிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, நலக்குழு உறுப்பினர்கள் பொன். பால கணபதி, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
why is ai important to the future