/* */

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்

குமரியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி.

HIGHLIGHTS

குமரியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்
X

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வந்தது. சுமார் முப்பத்தி ஆறு மணி நேரம் பெய்த இந்த கனமழை காரணமாக குமரியின் மேற்கு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து 11000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோதையாறு, திற்பரப்பு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளமாக தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

இதனையடுத்து தண்ணீர் ஓடுபாதையில் அமைந்துள்ள குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால் காட்டாற்று வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது. ஏற்கனவே திருநந்திக்கரை, களியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது. மேலும், முன்சிறை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் புகுந்ததால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது.

Updated On: 18 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.