/* */

குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் தலைமறைவு

குமரியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தலைமறைவு ஆன நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குமரியில் சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் தலைமறைவு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 14 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். மகள் அருகில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வீட்டில் இருந்து பள்ளிக்கு நடந்து சென்று வருவது வழக்கம். இந்நிலையில் நாகர்கோவில் அருகே தெற்கு சூரங்குடி கீரிவிளையை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவரின் மகன் ஆட்டோ ஓட்டுனரான வினோத் கடந்த மாதம் 4 ஆம் தேதி சிறுமி படிக்கும் பள்ளி அருகே சவாரிக்கு வந்துள்ளார்.

அப்போது சிறுமியை பார்த்து சிரித்து, கையசைத்து மெதுவாக பேச்சு கொடுத்து உள்ளார். பின்னர் சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி வினோத் சிறுமியை பின்தொடர்ந்து வந்து, ஆசை வார்த்தைகள் பேசி காதலிப்பதாக கூறி உள்ளார். மேலும் சிறுமியும் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி அவரை சம்மதிக்க வைத்து உள்ளார்.

தொடர்ந்து 2 பேரும் நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமியை தெங்கம்புதூர் பகுதிக்கு அழைத்து சென்ற வினோத் சிறுமியை வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கைகள் மாறுதலாக இருந்த நிலையில் சிறுமியிடம் விசாரித்த பெற்றோர்கள் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்ததோடு இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே வினோத் தலைமறைவான நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Updated On: 11 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!