/* */

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்
X

மத்திய அரசின் மீன் படி திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் உள்ள  48 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய கடல் சார் மீன் பிடி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி, பள்ளம், ராஜாக்கமங்களம் உட்பட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்கள் படகுகளில் கருப்பு கொடி கட்டியும், தங்கள் கைகளில் கருப்பு கொடி ஏந்தியும் மத்திய அரசிற்கு எதிரான கண்டன பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா நிறைவேற்றப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகும் என்பதால் மத்திய அரசு புதிய மசோதாவை திரும்ப பெற வேண்டும் என கூறி கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 9 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...