/* */

குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்

குமரியில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பூங்கொத்து கொடுத்து மாணவர்களை வரவேற்றார்.

HIGHLIGHTS

குமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற ஆட்சியர்
X

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியான நேற்று முதல் மாநிலம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளை திறக்க மாநில அரசு உத்தரவிட்டிருந்தது, அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்படவில்லை, இதனிடையே இன்று மாநில அரசின் உத்தரவுப்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்கள் கூறியும் வரவேற்றார். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பரிசு பொருட்கள் வழங்கியும் வித்தியாசமான முறையில் மாணவர்களை வரவேற்றனர்.

Updated On: 2 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை