கடல் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்கள் பிடிக்கும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
X
By - A. Ananthakumar, Reporter |4 March 2022 9:45 PM IST
குமரியில் கடல் கூண்டுகளில் வளர்க்கப்பட்ட மீன்களை பிடிக்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் கன்னியாகுமரி லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் கடந்த ஓராண்டு காலமாக உலக வங்கி நிதியுதவியுடன் நிலைத்த வாழ்வாதாரத்திற்கான மேலாண் திட்டத்தின் கீழ் தலா ரூ.2 இலட்சம் மதிப்பில் 2 கூண்டுகளில் கொடுவா மீன்கள் வளர்க்கப்பட்டது. அதன்படி வளர்க்கப்பட்ட கொடுவா மீன்களை பிடிக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், தொடங்கி வைத்தார். மேலும் பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu