Begin typing your search above and press return to search.
கன்னியாகுமரியில் போக்குவரத்து விதி மீறல், ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு
கன்னியாகுமரியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஒரே நாளில் 2485 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வகையில் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துக்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.
கஅதன் படி நடைபெற்ற வாகன சோதனையில் தலைகவசம், உரிய ஆவனங்கள் இன்றி போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 2485 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.