/* */

குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை.

HIGHLIGHTS

குமரி மலை கிராமத்தில் நியாய விலை கடையில் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
X

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதையாறு மலை கிராமத்தில் குற்றியார், கிளவியார் உட்பட பல்வேறு கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பேருந்து வசதிகள் போதிய அளவு இல்லாததால் அந்தப் பகுதியில் மலைவாழ் மக்கள் பயன்பெறும் விதமாக ரேஷன் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரேஷன் கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் ரப்பர் பால் வெட்டும் பணிக்காக சென்ற போது ரேஷன் கடையில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அங்குள்ள பொது மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பேச்சிப்பாறை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த மேஜை உடைக்கப்பட்டு இருந்தது, அதில் பணம் ஏதும் இல்லாத நிலையில் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு சீனி உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!