/* */

தேர்வு முடிந்த பின்னர் தீர்மானம் கொண்டு வருவது ஏமாற்றும் செயல் - தளவாய்சுந்தரம்

நீட் தேர்வு முடிந்த பின்னர் தீர்மானம் கொண்டு வருவது என்பது மக்களை ஏமாற்றும் செயல் என எம்.எல்.எ தளவாய்சுந்தரம் குற்றம் சாட்டினார்.

HIGHLIGHTS

தேர்வு முடிந்த பின்னர் தீர்மானம் கொண்டு வருவது  ஏமாற்றும் செயல் - தளவாய்சுந்தரம்
X

தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பேட்டி ( பைல் படம்)

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக மாணவர்களுக்கு துரோகம் செய்வதாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான தளவாய் சுந்தரம் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் நீட் தேர்வு ரத்து தேர்வில் இருந்து விலக்கு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெளிவாக கூறி உள்ளது, கடந்த ஆட்சி காலத்தில் முதலமைச்சர்களாக இருந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஜனாதிபதிக்கு பல மனுக்கள் எழுதி அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடியானது.

இநிலையில் கடந்த ஐந்து வருடங்களாக நீட் தேர்வு நடைபெற்று வருகின்றது, நீட் தேர்வை வைத்து அரசியல் பேசிய திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என்ற பொய்யான வாக்குறுதியை கூறி ஆட்சி கட்டிலில் அமர்ந்த பின்னர் தங்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை என கூறியது.

தற்போது குறுகிய காலத்தில் நீட் தேர்வு ரத்து என்பது நடக்காத காரியம் என முதலமைச்சரும், சுகாதாரத்துறை அமைச்சரும் கூறி வருகின்றனர், இவர்கள் வரும் ஐந்து ஆண்டு காலமும் இதையேதான் பேச போகிறார்கள்

அவர்களை பொருத்தவரை நீட் தேர்வு குறித்த அவர்களின் பேச்சு வரும் ஆனால் வராது என்ற வடிவேல் பாணியில் மட்டுமே இருக்கும் என்றும் மாணவர்கள் விஷயத்தில் துரோகம் செய்த திமுக எத்தனை முறை ஆட்சி கட்டிலில் இருந்து கொண்டு நீட் வராது என கூறினாலும், அதனை ரத்து செய்வதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

நீட் தேர்வு ரத்து ஆனால் அது தனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என கூறிய அவர் நீட் தேர்வு நடைபெறும் வரை அமைதியாக இருந்து விட்டு நாளை சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வரப்படுவதாக கூறி மீண்டும் திமுக மக்களை ஏமாற்றுவதாகவும் அதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

Updated On: 12 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது