நகைகடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது

நகைகடையில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது
X

குளச்சல் பகுதியில் நகை கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை பொறிவைத்து போலீசார் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஆலஞ்சி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள நகைகடையில் அமர்ந்து வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்துக் கொண்டு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவரது பெயர் கிராட்சன் (23), மிடாலம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ai in future agriculture