/* */

நகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

- போலீசார் வைத்த பொறியில் சிக்கிய குற்றவாளி

HIGHLIGHTS

நகைக்கடை  பூட்டை  உடைத்து கொள்ளை முயற்சி
X

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்த பகுதியில் ஒரு நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவரது நகைக்கடையில் மர்மநபர் பூட்டை உடைத்து திருட முற்படும் போது அங்கு இருந்த அபாய மணி அடிக்கவே மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குற்றவாளியை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் கொல்லங்கோடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில் கடையை உடைத்து திருட முயன்றது மார்த்தாண்டம் துறை பகுதியை சேர்ந்த பாபு (34) என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். விரைந்து குற்றவாளியை பிடித்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 29 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    புதிய நீதிமன்றம் அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் கொல்லிமலை அரசு ஐடிஐக்களில் தொழிற்பயிற்சிகளில் சேர...
  4. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  5. ஈரோடு
    ஈரோடு அருகே பயங்கரம்: தாயைக் கொன்று மகன் தற்கொலை முயற்சி
  6. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  7. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  8. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!