மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

மர்ம நபர்களிடம் நகையை பறிகாெடுத்த மூதாட்டி பெருமாள்பிள்ளை.

குமரியில் மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவருடைய மனைவி பெருமாள்பிள்ளை (வயது 74).

இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெருமாள் பிள்ளையிடம் முகவரி கேட்பது போல் அருகில் வந்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பெருமாள்பிள்ளையின் முகத்தில் தூவிய நிலையில் இதனை சற்றும் எதிர்பாராத பெருமாள்பிள்ளை அலறி துடித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள், பெருமாள் பிள்ளையின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பெருமாள்பிள்ளை பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?