/* */

மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

குமரியில் மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி 5 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

HIGHLIGHTS

மூதாட்டி மீது மிளகாய் பொடி தூவி நகை கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
X

மர்ம நபர்களிடம் நகையை பறிகாெடுத்த மூதாட்டி பெருமாள்பிள்ளை.

பூதப்பாண்டி அருகே அழகியபாண்டியபுரம் குறத்தியறை பகுதியை சேர்ந்தவர் பெருமாள், இவருடைய மனைவி பெருமாள்பிள்ளை (வயது 74).

இவர் வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பெருமாள் பிள்ளையிடம் முகவரி கேட்பது போல் அருகில் வந்தனர்.

பின்னர் திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பெருமாள்பிள்ளையின் முகத்தில் தூவிய நிலையில் இதனை சற்றும் எதிர்பாராத பெருமாள்பிள்ளை அலறி துடித்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள், பெருமாள் பிள்ளையின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பெருமாள்பிள்ளை பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 20 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!