குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்

குமரியில் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்
X
குமரியில் போலீசாரின் சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனையை தீவிரமாக கண்காணிக்க குமரி மாவட்டத்தில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சணல் குமார் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவலர்கள் சகிதம் அங்கு சென்றார்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற நபரை பிடித்து விசாரணை செய்த போது அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது (51) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவரை பிடித்து தீவிர விசாரணை செய்ததோடு அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரிடமிருந்த 13 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் அவர் மீது காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்தார்.

Tags

Next Story
ai in future agriculture