/* */

குமரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

குமரியில் மாஸ்க் அணியாமல் வரும் நபர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து, மாஸ்க் வழங்கி, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

குமரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு
X

மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த போலீசார். 

கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு ஒமிக்கிரான் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தவும், நோய் பரவலை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகள் உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளும் போலீசார், மாஸ்க் அணியாமல் வரும் நபர்களை தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிப்பதோடு, அவர்களுக்கு மாஸ்க் வழங்கி மாஸ்க் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். நோய் பரவல் அதிகரித்து உள்ள நிலையில், மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 7 Jan 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...