மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனை - 2 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் சென்று கஞ்சா விற்பனை - 2 வாலிபர்கள் கைது
X
மோட்டார் சைக்கிளில் சென்று சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் பசும்பொன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது அவர்கள் அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30) மற்றும் ஜெயபால்(21) என்பது தெரியவந்தது. அவர்களின் பேச்சு முன்னுக்கு பின் முரணாக இருந்த நிலையில் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்து இருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
உங்கள் மொபைலில் டாக்டர்: AI-ன் மூலம் 2 மாதம் முன்னமே Dengue, COVID, Flu எல்லாம் predict பண்ணலாம்!