/* */

திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
X

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற பழமை வாய்ந்த கோவிலாக உள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இந்த கோவிலில் மாசி கொடை விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவிழாவின்போது கடியன்கோடு பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடைய குழந்தை கூட்டத்தில் திடீரென காணாமல் போனது.

அந்த குழந்தையை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தென்காசி மாவட்ட காவல்துறை பயிற்சி சார்பு ஆய்வாளர் பசுபதி மற்றும் தலைமை காவலர் சுடலைமுத்து, முதல்நிலைக் காவலர் கணேசமூர்த்தி ஆகியோர் மீட்டு தவறவிட்ட பெற்றோரிடம் விசாரணை செய்து ஒப்படைத்தனர்.

காணாமல் போன குழந்தையை மீட்டுக் கொடுத்த போலீசாரை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மற்றும் சக போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 7 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!