/* */

இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இளைஞர்கள் தொழில் தொடங்க கடன் உதவி; கன்னியாகுமரி ஆட்சியர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் ஆரம்பிக்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு உற்பத்தி பிரிவிற்கு ரூபாய் 25 லட்சம் மற்றும் சேவை பிரிவிற்கு ரூபாய் 10 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு வங்கி மூலம் கடன் வழங்கப்படுகிறது.

உற்பத்திப் பிரிவின் கீழ் ரூபாய் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு தொழில் செய்யும் பஞ்சாயத்து மற்றும் சமூகப் பிரிவைப் பொறுத்து 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை நிரப்பி, தேவையான ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...