குமரியில் ஒரே நாளில் 103 வாகனங்கள் மீது வழக்கு - 5,74,370 ரூபாய் அபராதம் வசூல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகளில் கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வருவதோடு, அதி வேகமாக செல்வதால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த கனரக வாகனம் மோதியதில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிக பாரம் ஏற்றி கொண்டு அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணிக்கவும், வழக்கு பதிவு செய்யவும், அபராதம் விதிக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் இன்று கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர், அதன்படி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் ஒரே நாளில் அதிக பாரம் ஏற்றி அதிவேகமாக வந்த 103 வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 5 லட்சத்து 74 ஆயிரத்து 370 ரூபாய் அபராதமாக வசூலித்தனர், இந்த கண்காணிப்பு மற்றும் அபராதத்துடன் கூடிய வழக்குப் பதிவு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu