/* */

குமரியில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைப்பு: மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு

அமைதியை நிலைநாட்டும் வகையில் நாளை அறிவித்திருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

குமரியில் நாளை நடைபெற இருந்த  போராட்டம் ஒத்தி வைப்பு: மாவட்ட பாஜக தலைவர் அறிவிப்பு
X

குமரி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பாஜக தலைவர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சமீபத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் உள்துறை அமைச்சர் ஆகியோரை கடுமையாக விமர்சித்ததோடு, இந்து மதம், இந்து கோவில்கள், மத நம்பிக்கை போன்றவை குறித்தும் போதகர் ஜார்ஜ் பொன்னையா அவதூறாக விமர்சித்தார்.

மேலும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர், பாஜக தலைவர்கள் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். இதனிடையே கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அமர்ந்து இந்த அவதூறு பேச்சை ஆதரித்த அனைவரையும் கைது செய்ய கூறி குமரி மாவட்ட பாஜக சார்பில் குளச்சலில், நாளை மிகப்பெரிய அளவிலான போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் காவல்துறை தாமாக முன்வந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற மேலும் சில அமைப்புகளின் பொறுப்பாளர்களையும் காவல்துறை கைது செய்யும் என தெரிகிறது. இதனிடையே மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையிலும் நாளை அறிவித்திருந்த ஆர்ப்பாட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்