/* */

வீட்டில் மறைத்து வைத்திருந்த மண்ணுளி பாம்பு பறிமுதல் செய்த வனத்துறையினர்

குமரியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நான்கரை கிலோ மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

வீட்டில் மறைத்து வைத்திருந்த மண்ணுளி பாம்பு பறிமுதல் செய்த வனத்துறையினர்
X

கன்னியாகுமரி அருகே வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மண்ணுளிபாம்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிநாதபுரம் குண்டல் பகுதியில் வீட்டில் வியாபார நோக்கத்தோடு சட்டத்திற்குப் புறம்பாக மண்ணுளி பாம்பினை வைத்திருப்பதாக குமரி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் இளையராஜா உத்தரவின்பேரில் வனப்பாதுகாவலர் சிவக்குமார் தலைமையில் தனிக்குழு குண்டல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சதுரங்க வேட்டை படம் பாணியில் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவரின் பூட்டியிருந்த வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் உள்புற அறையில் சுமார் நான்கரை கிலோ எடை மற்றும் 141 சென்டிமீட்டர் நீளம் கொண்ட அரியவகை மண்ணுளி பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையினர் கைப்பற்றினர், இதனிடையே பாம்பை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து இருந்த அரவிந்த் என்பவர் தலைமறைவான நிலையில் அவரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 26 March 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  4. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  5. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  6. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  9. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்