/* */

உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம் மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

மீன்பிடித்துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடை சரி செய்தல் என எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யவில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

HIGHLIGHTS

உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம்   மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
X


கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடு சீரமைத்தல் என எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்யாததால் தான் உயிரிழப்புகள் தொடர்கதையாகி வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதனிடையே உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்கள் முயன்றனர்.

ஆனால், மீன்வளத்துறை அமைச்சர் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்வதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்த மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தேங்காய்பட்டிணம் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் இருந்து முகத்துவாரப்பகுதி வரை மீனவர்கள் கைகளில் கறுப்பு கொடி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர்.

Updated On: 18 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்