பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்த எஸ்.பி.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களுக்கு குடும்பத்துடன் என்று வாழ்த்து தெரிவித்த எஸ்பி பத்ரிநாராயணன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியான முறையிலும், பாதுகாப்பாகவும், தீபாவளி பண்டிகையை கொண்டாட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் 1500 போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்பத்தினரை மறந்து பண்டிகையை மறந்து பணியில் கவனம் செலுத்தும் போலீசாரை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனது குடும்பத்துடன் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை நேரடியாக சந்தித்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் கூறி உற்சாகப்படுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குடும்பத்துடன் நேரடியாக வந்து உற்சாகப்படுத்தி, தீபாவளி பண்டிகையை சிறப்பித்தது மிக மகிழ்ச்சியளிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu