/* */

குமரியில் தீவிர வாகனத்தணிக்கை: 108 கனரக வாகனங்கள், 2492 நபர்கள் மீதுபோலீஸார் வழக்கு

குமரிமாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 600 -க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20,000 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

HIGHLIGHTS

குமரியில் தீவிர வாகனத்தணிக்கை: 108 கனரக வாகனங்கள், 2492 நபர்கள்  மீதுபோலீஸார் வழக்கு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அதிக வேகத்துடன் வரும் கனரக வாகனங்கள் மற்றும் இலகு கரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்கள் மீது விதிமுறை மீறல் வழக்கு பதிவு செய்துநடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

அதன்படி, குமரிமாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் அதிக பாரம் ஏற்றி கொண்டு வேகமாக வந்த 108 கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று தலைக்கவசம் அணியாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வலம் வந்த 2492 வாகனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் குமரிமாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மற்றும் 20,000 -கும் மேற்பட்ட விதிமுறை மீறல் வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...