/* */

அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

குமரியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகனங்களின் விதி மீறிய போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வேகமாக வருவதாகவும் இதன் காரணமாக விபத்துக்கள் நடைபெருவதாகவும் புகார்கள் இருந்து வந்தன.

வாகன விபத்தை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று ஒருநாள் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 111 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது தொடர்ந்து வாகன சோதனை நடைபெரும் என்றும், அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Updated On: 3 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  4. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  5. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  7. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  8. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  9. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!