/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்த 8603 பேரின் மனுக்கள் பரிசீலனை மாலை 5மணியுடன் நிறைவு பெற்றது

HIGHLIGHTS

தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் கடந்த 7 நாட்களாக அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 2603 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு துவங்கிய வேட்புமனு பரிசீலனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வேட்புமனு பரிசீலனை தொடர்ந்து அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

மாலை 5மணியளவில் அனைத்துக் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவு பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அதன்பின் விவரங்கள் வெளியிடப்படும் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Updated On: 24 Sep 2021 9:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’