ஆதம்பாக்கத்தில் நன்னடத்தை பிணை உறுதியை மீறிய ரவுடி மீண்டும் கைது

கைது செய்யப்பட்ட ரவுடி தினேஷ்.
சென்னை ஆதம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் தினேஷ் (எ) பம்பர் தினேஷ். இவர்2021 வருடம் நசம் (எ) அஜித்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்.
இந்த நிலையில் கடந்த 11.02.2022 அன்று புனித தோமையர் மலை காவல் மாவட்ட துணை ஆனணயாளரிடம் தான் திருந்தி வாழ போவதாகவும் ஒரு வருட காலத்திற்கு எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்று நன்னடத்தை உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.
ஆனால் கடந்த 8.04.2022 அன்று ஆதம்பாக்கம் வள்ளலார் தெருவில் உள்ள ஒரு பாரில் வீராசாமி(53), என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் 500 பறித்ததாக ஆதம்பாக்கம் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்டு நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறிய குற்றத்திற்காக செயல் முறை நடுவர் புனித தோமையர் மலை காவல் மாவட்ட துணை ஆணையாளர் பிரதீப் தினேஷிற்கு 110 விதியின் கீழ் நன்னடத்தையாக இருந்த நாட்கள் தவிர மீதம் உள்ள 309 நாட்களுக்கு பினணயில் வரமுடியாத தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் தினேஷ் (எ) பம்பர் தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu