கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவர் கைது

கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவர் கைது
X

கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ்.

கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை புனித தோமையர் மலை மாகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மார்க் டி குரூஸ்(19), இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார்.

இந்தநிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மார்க் டி குரூஸ் அறிமுகமாகி அவர்களுடன் பழகி அவர்களின் ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

இவரின் மிரட்டலையடுத்து சிறுமிகள் அவர்களின் பெற்றோர்களிடம் கூற பெற்றோர் கேரள மாநிலம் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து புகாரை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் கேட்டுக்கொண்டனர்.

புகாரை பெற்றுக் கொண்ட புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மார்க் டி குரூஸ் ஐ கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. சிறையில் அடைக்கப்பட்டார்

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?