/* */

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

பழவந்தாங்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

வீட்டின் பூட்டை உடைத்து  திருடிய நபர் கைது
X

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, நங்கநல்லுார், அய்யப்பன் நகர், துரைசாமி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீதர்(61), கடந்த ஆண்டு, ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 41 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இது குறித்து அளித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஸ்ரீதர் வீட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்வாயிலாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில்முருகன்(29), என்பது தெரியவந்தது. பழைய குற்றவாளியான இவர் மீது, பழவந்தாங்கல், பண்ருட்டி காவல் நிலையங்களில் ஐந்து திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 17 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்