/* */

சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து

சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று திடீர்  தீ விபத்து
X

சென்னை ஆதம்பாக்கம் ஹார்டுவேர்ஸ் கடையில்  தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை ஆதம்பாக்கத்தில் முகமது(45) என்பவருக்கு சொந்தமான கே.எம்.ஹார்டுவேர்ஸ் கடையில் இன்று மதியம் 2.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதியம் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதனை கண்டவர்கள் முகமதிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவலறிந்து கிண்டி, வேளச்சேரி, தேனாம்பேட்டை, தாம்பரம், திருவல்லிகேணி, அசோக்நகர் என 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 1.30 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதனால் மேடவாக்கம் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பகுதி முழுவதும் புகை மண்டலமானது, அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக குவிந்தனர்.
ஹார்டுவேர் கடையில் பற்றிய தீயில் பெயிண்ட் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்தது, அருகில் மருத்துவமனையில் தீ பரவி கண்ணாடி மட்டும் சேதமானது.மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Updated On: 8 Aug 2022 12:43 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா