/* */

நங்கநல்லூரில் மின்சாரம் தாக்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தார் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நங்கநல்லூரில் மின்சாரம் தாக்கி 11ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி சிறுமி பலி

சென்னை, நங்கநல்லுார், ஹிந்து காலனி, சாய்ராம் குடியிருப்பை சேர்ந்தவர் மனவ்பட்நாயக். இவர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சுரங்க நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இவரது மகள், அனன்யா(16), வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், 11ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று மாலை வீட்டின் பால்கனியில் இருந்து, அருகில் உள்ள புங்க மரத்தில் சிக்கிய சிறிய தலையணையை அலுமினிய பைப் வாயிலாக எடுக்க முயன்றார்.
அப்போது, இடையில் சென்ற உயர் மின் அழுத்த கம்பி, அலுமினிய பைப் மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்து அனன்யாவுக்கு வலது கையில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோததித்த டாக்டர்கள் அனன்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு