ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 18வது வார்டில் இரு முனை போட்டி
By - C.Elumalai, Sub -Editor |4 Oct 2021 5:13 PM GMT
ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 18வது வார்டில் இரு முனை போட்டி நிலவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
இதில் 18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சக்ரவர்த்தி - திராவிட முன்னேற்றக் கழகம், ராதிகா- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் 2 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu