ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 1வது வார்டில் 6 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 1வது வார்டில் 6 பேர் போட்டி
X
ஊரக உள்ளாட்சி தேர்தலில் உளுந்தூர்பேட்டை ஒன்றியம் 1வது வார்டில் 6 முனைப் போட்டி நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வீரமணி- பாட்டாளி மக்கள் கட்சி, ரமேஷ்- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாக்கியராஜ் -நாம் தமிழர் கட்சி, சங்கர்- தேசிய முற்போக்கு திராவிட கழகம், கணேசன்- திராவிட முன்னேற்றக் கழகம், ஏழுமலை- சுயேட்சை ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் 6 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!