/* */

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர், செவிலியர் இல்லாமல் முதலுதவி கிடைக்காத அவலநிலை.

HIGHLIGHTS

மருத்துவர் இல்லாத அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
X

களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் செவிலியர் இல்லாமல் முதலுதவிக்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளையும் அலைக்கழிக்கும் அவலநிலை.

களமருதூர் அருகே உள்ளநன்னாரம் கிராமத்தில் இரவு 2 மணி அளவில் முதியவர் ஒருவருக்கு தேள் கொட்டியது. அவரை உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் களமருதூர் அழைத்து சென்றனர். ஆனால், அங்கு டாக்டர் செவிலியர் யாரும் இல்லை எனவும் அவருக்கு டிடி ஊசி போட முடியாது எனவும் அங்கிருந்த பணியாளர் கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பணிக்கு டாக்டர் செவிலியர் இல்லையெனவும் அவர் கூறினார். இதனை அடுத்து வாக்கு வாதத்திற்கு பிறகு ஒரு மணி நேரம் கழித்து கைபேசி மூலம் செவிலியரை அழைத்து வரவைத்து அந்த முதியவருக்கு முறையான முதல் உதவி செய்யப்பட்டது.

அவசர முதலுதவி தேவைப்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் மருத்துவரோ செவிலியரோ இல்லாதது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 Sep 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...