/* */

சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X

அக்கராப்பாளையத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட மொத்தம் 18 வார்டுகள் உள்ளன . இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். உரிமைப் பிரச்சினை குறிப்பாக அக்கராப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சியின் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கரா பாளையம் 7 மற்றும் 8 ஆகிய வார்டுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது குறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று அக்கரா பாளையம் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கச்சராபாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் சமாதானம் கூறியும் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

Updated On: 5 Oct 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...