ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 5வது வார்டில் 4 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 5வது வார்டில் 4 பேர் போட்டி
X

திமுக- அஞ்சலை, அதிமுக-குறிஞ்சிமலர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஒன்றியம் 5வது வார்டில் நான்கு முனைப்போட்டி நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அஞ்சலை, அதிமுக சார்பில் குறிஞ்சிமலர், தேமுதிக சார்பில் அனிதா, பாஜக சார்பில் கவிதா ஆகிய 4 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

ரிஷிவந்தியம் 5வது வார்டில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக என 4 கட்சிகள் நேரடியாக களம் காண்கின்றனர்.

இந்நிலையில் 4 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business