ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 13வது வார்டில் 5 பேர் போட்டி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: ரிஷிவந்தியம் ஒன்றியம் 13வது வார்டில் 5 பேர் போட்டி
X
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ரிஷிவந்தியம் ஒன்றியம் 13வது வார்டில் 5 முனைப்போட்டி நிலவி வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சுதா, தேமுதிக சார்பில் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்பழனி, நாம்தமிழர் கட்சி சார்பில் ஹரிஹரஷர்மா, சுயேட்சையாக குமார் ஆகிய மொத்தம் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

ரிஷிவந்தியம் 13வது வார்டில் அதிமுக, தேமுதிக, இ.கம்யூ., நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 5 பேர் களம் காண்கின்றனர்.

இந்நிலையில் 5 வேட்பாளர்களும் கிராமம் கிராமாக தங்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

Tags

Next Story
ai solutions for small business