உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் அவதி

உளுந்தூர்பேட்டை  அருகே கிராமத்திற்குள் புகுந்த கழிவுநீர்: பொதுமக்கள் அவதி
X

புகைப்பட்டி கிராமத்தில் தேங்கியுள்ள கழிவுநீர். 

உளுந்தூர்பேட்டை அருகே கிராமத்திற்குள் கழிவுநீர்: புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் புகைப்பட்டி கிராமத்தில் காமராஜர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையோரம் செல்லும் மெயின் கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாத காரணத்தால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கழிவுநீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக சாக்கடைநீர் தேங்கியுள்ளதாலும் மிகுந்த துர்நாற்றம் வீசிவருவதாலும் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேவர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture