/* */

டிசம்பர் 5 ஜெயலலிதா நினைவு நாள்: எடப்பாடி தரப்பு முடிவு

டிசம்பர் 5 ஆம் தேதியே ஜெயலலிதா நினைவு நாளை, அனுசரிக்க, எடப்பாடி தரப்பு அதிமுக முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

டிசம்பர் 5 ஜெயலலிதா நினைவு நாள்:  எடப்பாடி தரப்பு முடிவு
X

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில், இன்னும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள்.

ஜெயலலிதா நினைவு நாளை, டிசம்பர் 5 ஆம் தேதியே அனுசரிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக முடிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த தேதியில் மரணமடைந்தார் என்ற சர்ச்சை இன்னும் நீடிக்கிறது.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனாள் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்திருக்கலாம் என சாட்சியங்கள் அடிப்படையில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் ஜெயலிதாவின் சகோதரர் மகன் டிசம்பர் 4 இறந்ததாக கொண்டு அவருக்கு முதலாமாண்டு திதி கொடுத்ததாகவும் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனால் ஜெயலலிதாவின் நினைவுநாள் எப்போது அனுசரிக்கப்படும் என கேள்வியெழுந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, ஜெயலலிதாவின் நினைவு நாளை எப்போதும் போல் டிசம்பர் 5 ஆம் தேதியே கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அன்றைய தினம்,மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்துவார் என அக்கட்சியின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Nov 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...